பக்கங்கள்

Tuesday, November 29, 2011

முதுகலை ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு-அரசாணை



சுருக்கம்

பள்ளிக் கல்வி – முதுகலை ஆசிரியர் நியமனம் - வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யும் முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக நியமனம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி(க்யு)த் துறை அரசாணை (நிலை) எண்.175 நாள் 08.11.2011

படிக்க:-

அரசாணை(நிலை) எண்.290, பள்ளிக் கல்வித் (க்யு) துறை, நாள் 06.12.2007.
----
ஆணை :-
  • மேலே படிக்கப்பட்ட அரசாணையில், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரிஆசிரியர்கள் உள்ளிட்ட ஏனைய ஆசிரியர்கள் வேலை வாய்ப்பகப் பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும் அதே முறையைப் பின்பற்றி முதுகலைஆசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யும் போதுவேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்து நியமிக்க அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
  •  வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர் நியமனம்செய்யும் முறை குறித்து  அரசு கவனமுடன் பரிசீலித்தது. முதுகலை ஆசிரியர்கள் நியமனம் எழுத்துத் தேர்வு (Written Examination) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக மேற்கொள்ளலாம் என முடிவு செய்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

---------------------------------------------

இவ்வாறு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment